
posted 11th February 2022
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.
வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மீனவர்களின் பிரச்சனைகளை சரியாக ஆராய்ந்து அதனை ராஜதந்திர ரீதியில் நகர்த்தவேண்டிய தேவையுள்ளது.
அந்த விடயம் தொடர்பில் கடந்த வாரமும் யாழ். மாவட்ட ரீதியில் கலந்துரையாடி இருந்தோம். அதேபோல இன்றைய தினம் வடமாகாணத்துக்குட்பட்ட நான்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடியுள்ளோம்.
இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலே 4 மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகளை எங்களுக்கு ஆதரவு தருமாறும், ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எங்களோடு இணைந்து செயற்பட வருமாறும் நாங்கள் கோரியிருக்கின்றோம்.
மீனவர்களிடையே பிளவை ஏற்படுத்தாது நமது ஒற்றுமையை வலுப்படுத்தி நாம் ஒற்றுமையாக தீர்வை நோக்கி நகர்வதற்கு அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்கவேண்டும். கட்சி பேதமின்றி மீனவர்களுக்குள்ள பிரச்னைகளை ஆக்கபூர்வமாக ஒரே குடையின் கீழ் கையாளவேண்டும்.
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எம்முடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
எதிர்காலத்தில் மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமல், இருப்பதற்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூகங்கள், புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம்.
யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள இந்திய தூதரகங்களின் வாக்குறுதிகளை நாங்கள் நம்ப முடியாது. அவர்களின் வாக்குறுதிகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னை ஐந்து வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்களின் உறுதிமொழியினால் எமக்கு எந்தவித பயனும் கிடைக்காது என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House