
posted 22nd February 2022
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தியும் வெளியிடுகின்றனர்.
பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் வினவியபோது,
இருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்து போயுள்ளது. வரும் மக்களுக்கு பெற்றோலை வழங்க முடியவில்லை. இருப்பில் உள்ள சுப்பர் பெற்றோலையே வழங்குகின்றோம். அதுவும் குறைவாகவே உள்ளது.
இருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோல் மற்றும் டீசலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குகிறோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House