அதிகரித்த கொடுப்பனவு

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய, அம்பாறை மாவட்டத்திலும் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களின் கீழான சமுர்த்தி வங்கிப் பிரிவுகளில் குறித்த, சமுர்த்தி நிவாரண உதவி அதிகரித்து வழங்கும் நிகழ்வுகள் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றுள்ளன.

குறித்த அரசின் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து சமுர்த்தி நிவாரண உதவி அதிகரித்து வழங்கப்பட ஆவன செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 3500 ரூபா சமுர்த்தி நிவாரண உதவிபெறும் ஒருவருக்கு அதிகரிக்கப்பட்ட படி 4500 ரூபாவும், 2500 ரூபா பெறுபவருக்கு (சமுர்த்தி பயனாளிக்கு) 3500 ரூபாவும், 1500 ரூபா பெறுபவருக்கு 1900 ரூபாவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமூர்த்திப் பிரிவினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வுகள் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் சிறப்புற நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பயனாளர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வுகளில் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், சமயத்தலைவர்கள், கிராமியக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் விரிவான விளக்க உரைகளும் ஆற்றப்பட்டன.

அதிகரித்த கொடுப்பனவு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House