
posted 9th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடமராச்சியில் டெங்கு பரவல்
வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் 37 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக (டிசம்பர் 01 - 07) கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களது எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது..
இதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் 52 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செம்டெம்பர் முதல் நவம்பர் வரையான மூன்று மாதங்களில் 98 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)