
posted 10th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கைத்தொலைபேசிகள் ஒளிகொடுக்க வெளியிடப்பட்ட நூல்
கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (09) சனிக்கிழமை மாலை புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' நூல்வெளியீட்டு நிகழ்வு தொடங்கிய சொற்ப நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது.
மீண்டும் மின்சாரம் வரும் என்று ஒரு பத்து நிமிடம் காத்திருந்தபோது நாடுபூராவும் மின்சாரம் தடைப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
காத்திருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து மாலை வேளையின் மங்கல் வெளிச்சத்தில் நிகழ்வை தொடருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பக்கத்தில் நின்று ஆட்கள் மாறிமாறி கைத்தொலைபேசி வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்க பேச்சாளர்கள் உரைகளை நிகழ்த்தினார்கள். அவ்வாறே அந்த வெளிச்சத்திலேயே நூல் பிரதிகளும் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன.
சபையோரில் பலரும் தங்கள் கைத்தொலைபேசிகளை ஔிரவிட்டுக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நிரல்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
கைத்தொலைபேசி வெளிச்சத்தில் முழுமையாக நடைபெற்ற முதல் நூல்வெளியீட்டு நிகழ்வு இதுவாகவே இருக்கலாம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)