
posted 24th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை பூச்சியியல் பிரிவினால் பூச்சியியல் ஆய்வறிக்கை வெளியீடு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ. ஹமீட் தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்ட அரையாண்டு பூச்சியியல் ஆய்வறிக்கை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பிராந்திய பூச்சியியல் ஆய்வுக்குழுவின் பொறுப்பாளர் சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ. ஹமீட் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சக்கிலா இஸ்ஸடீனிடம் ஆய்வறிக்கையின் முதல் பிரதியினை கையளித்தார்.
குறித்த ஆய்வறிக்கையின் விசேட பிரதியினை சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர் எஸ்.ரீ. பிர்தௌஸ் பிராந்திய தொற்று நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம். பஸாலிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)