
posted 2nd December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஐக்கிய காங்கிரஸ் கட்சி

அடுத்த ஆண்டு 2024 இரண்டு தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக கௌரவ ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் இத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி தேர்தல்கள் ஆணையகத்தினால் பதிவுசெய்யப்பட்டதின் பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது (பாராளுமன்ற) தேர்தலுக்கு வேட்பாளர்களை தயார் செய்யும் நடவடிக்கைகளில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி கட்சியின் சின்னமான ஒட்டக சின்னத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
எனவே ஐக்கிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் முழுப் பெயர், தேர்தல் மாவட்டம், தொகுதி என்பவற்றை குறிப்பிட்டு தேசிய அடையாள அட்டையின் பிரதியில் கையொப்பம் இட்டு அதனை எமக்கு வட்சப் மூலம் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)