
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கை இளைஞர்களின் பிரதிநிதியாக ஹஸீப் மரிக்கார்
காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மேலும் இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் மற்றும் சுற்றாடற்றுறை அமைச்சர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர். இந்த மாநாட்டில் உலகளவில் பாரிய சவாலாக இருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)