
posted 21st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அவசர ஒலியுடன் புகையிரத நிலையத்திலிருந்த பயணிகள் அகற்றப்பட்டனர்
இலன்டன் மாநகரில் போவ் றோட் (Bow Road Station) அன்டகிறௌன்ட் (Underground) புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்த புகையிரதத்தின் வெளிச்சமானது குறைக்கப்பட்டது. பின்பு, அவசர அறிவித்தல் சொல்லப்பட்டது, உடனடியாக அனைத்து பிரயாணிகளையும் புகையிரத நிலையத்தை விட்டு வெளியேறவும், என்பதுதான்.
அவசர விளக்குகள் புகையிரத நிலையத்திற்கு வெளியால் மின்னி மின்னி அறிவித்தலுடன் எரியத் தொடங்கின.
ஒரு வினாடிகளுக்குள் புகையிரத நிலையத்தின் வெளியால் அவசர சேவைகள் அனைத்தும் அவசர ஒலியுடன் வந்து குவியலாயின. காரணம் புரியாமல் அனைவரும் திகைத்து வெளியில் வந்து காத்திருந்தனர்.
பிந்திய செய்தியின் படி, ஒருவர் புகையிரதத்தின் முன்னால் தவறுதலாக விழுந்து விட்டார் அல்லது பாய்ந்து விட்டார். ஆனால், இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையானது இந்த கிறிஸ்மஸ் பண்டிகை வாரத்தில் நடைபெறுவது வழமையானது என்பது அங்கு நிற்கும் மக்களின் கருத்தும்கூட.