
posted 10th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். ஆயரை சந்தித்த உலகத் தமிழர் பேரவை
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலகத தமிழர் பேரவையினர், யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு ஜன்ரின் ஞானப்பிரகாசத்தை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பு தொடர்பில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில்;
யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்து அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம். எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம், மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு ஆயர் எம்மிடம் கோரினார் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)