
posted 10th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சர்வதேச மண் தின நிகழ்வு முன்னெடுப்பு
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினரால் சர்வதேச மண் தினம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தின நிகழ்வு திருநெல்வேலியிலுள்ள யாழ்.மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண் தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சிறப்பு நிகழ்வாக விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோாகத்தர்கள் இணைந்து வழங்கிய “மண் தேவி” விழிப்புணர்வு நாடகம் மேடையேற்றப்பட்டது.
மண் தின நிகழ்வில் விருந்தினர்களாக, வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தன், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் சீ. வசந்தரூபா, உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் கலாநிதி இ. அன்ரனிராஜன் உள்ளிட்டோரும், விவசாய அமைச்சு மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள், சனசமூக நிலையப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)