
posted 26th December 2023
ஆளுநர் கிறிஸ்மஸ் மரம்
துயர் பகிர்வு
ஆளுநர் கிறிஸ்மஸ் மரம்
கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24ஆம் திகதி இரவு இடம்பெற்ற விசேட சமய ஆராதனை நிகழ்வுகளில் கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டிருந்தார்.
டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் முன்னிலையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)