
posted 17th December 2022
ஜனநாயக போராளிகள் கட்சியின் தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை (17) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் கஜதீபன், பிரதேசபை தவிசாளர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)