
posted 20th December 2022
ஜனாதிபதியின் காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகரான முன்னாள் நோர்வே அமைச்சரும் ,சமாதான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டதரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை சந்தித்து, முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதேவேளை எரிக் சொல் ஹெய்ம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரையும் கொழும்பில் சந்தித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)