
posted 31st December 2022

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஐஎஸ்ஆர்சி தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள (தளபாடங்கள் உள்ளடங்கலாக) 25 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் கூலாங்குளம் ,
முசலி, சிலாவத்துறை ஆகிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தலா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 வீடுகளை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அவர்கள் வெள்ளிக்கிழமை (30) உரிய பயனாளிகளுக்கு கையளித்து வைத்தார்.
இதன்போது ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மொஹமட் சயாப் ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும் முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் மிஹ்லார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)