அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்தார்

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்) இறைபதமடைந்துள்ளாா்.

அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று செவ்வாய் (20) காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய வீட்டில் நடைபெற்று இன்று புதன் (21) இறுதிச்சடங்கு இடம்பெற்றது.

அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக் கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவானர் சின்னமனியுடன்

துயர் பகிர்வோம்

இணைந்து விஜயநாதன், ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும், நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நெறியாளராகவும் நாடகம், வில்லிசையென எண்ணிலடங்காத அரங்குகளில் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்தார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)