
posted 21st December 2022
விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விஷேட செயலஜனாதிபதியின் விஷேட செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறைச்சாலை விவகாரங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் திங்கள் கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்செயலஜனாதிபதியின் விஷேட செயலணியின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஒளடதங்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கான விஷேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் விடயம் தொடர்பில் இங்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனைத் தடுப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும் போதைப்பொருள் பாவனைத் தடுப்பது போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆகியோரை அடையாளம் காண்பது போதைகளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்தும் அவர்களது எதிர்கால நடவடிக்கைள், சிகிச்சைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான மையங்கள், சமூக புனர்வாழ்வு மையங்கள், நன்னடத்தை சேவை மையங்கள், சமூக புனர்வாழ்வு மையங்கள், நன்னடத்தை சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும் போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான சட்டத்தை இயற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிறைச்சாலை விவகாரங்கள், நீதி அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய, புனர்வாழ்வு பணியகத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வபெற்ற மேஜர் ஜெனரல் டி. டி. யு. கே. ஹெட்டியாராட்சி, தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)