
posted 9th December 2021
நாடுபூராவும் ஏற்பட்ட அசாதரணமான காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது மன்னார் லயன்ஸ் கழகம்.
75 சதவீதமான மன்னார் தீவு மக்களின் காணிகள், வீடுகள் வெள்ளத்தால் நிரம்பியிருந்ததால் சிலர் சொந்த வீடுகளை விட்டு வேற்று இல்லிடம் தஞ்சம் புகுந்து சீவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தேனாரம் இணையத்தளம் வெளியிட்டதை அறிவோம்.
இவ்வாறு பாதிப்புற்ற மக்களுக்கு, பிரதேச செயலகம் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினூடாகவும், தனியார் மற்றும் அமைப்புக்கள் போன்றோர் தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றது.
அந்தவகையில் அன்று தொட்டு சமூக பணியில் ஈடுபட்டு வரும் மன்னார் வயன்ஸ் கழகம் 304 பி எழுத்தூர் பகுதியில் இடம்பெயர்ந்து இருந்த 50 குடும்பங்களுக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம் பிரதீபன் தலைமையில் உதவிக்கரம் நீட்டும் படங்கள்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House