
posted 2nd December 2021
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறியுள்ளன.
கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (01.12.2021) வீட்டாரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது
.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீடுகளுக்கு சென்று அடுப்பை பார்வையிட்டன.
சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும், எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House