
posted 12th December 2021
மன்னார் சவூத்பார் கடற் பரப்பிலிருந்து தென் கடல் பிராந்தியத்தில் தூண்டில் மூலம் மீன் பிடிப்பதற்காக ஒரு படகில் சென்ற இரு மீனவர்கள் வழமைபோன்று கரை திரும்பாததால் இவர்களை தேடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது;
யாழ் பகுதியைச் சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ராதீபன் என்ற இரு மீனவர்கள் மன்னார் தாராபுரத்தில் தங்கியிருந்து மன்னார் சவுத்பார் கடற்கரை பகுதியிலிருந்து மன்னார் தென் கடல் பரப்பில் தூண்டில் மூலம் மீன்பிடிக்காக ஓஎவ்ஆர்பி-ஏ-3163 எம்என்ஆர் என்ற வெளிக்கள இயந்திர படகொன்றில் ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் வழமையாக கரைக்கு திரும்பும் நேரத்தில் கரை திரும்பாமையால் இது தொடர்பாக பொலிசிலும் மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கும் முறையீடு செய்துள்ளனர்.
தற்பொழுது இவர்களை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House