
posted 14th December 2021
மன்னார் மாவட்டத்தில் திங்கள் கிழமை (13.12.2021) கொரோனா தொற்றாளர்களாக 15 பேர் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் திங்கள் கிழமை (13.12.2021) 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும்,
மாவட்ட பொது வைத்தியசாலையிலும் விடத்தல்தீவு வைத்தியசாலையிலும் தலா 3 பேரும்,
அடம்பன் வைத்தியசாலையில் 2 பேரும்,
வங்காலை வைத்தியசாலையில் ஒருவரும் மொத்தம் 15 பேரே இம்மாதம் (டிசம்பர்) இவ்விடங்களில் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 13 ந் திகதி வரை இதுவரை கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 170 பேபேராக உயரந்துள்ளது..
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 29, 727 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3,103 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இதுவரைக்கும் 31 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளதாகவும், கொரோனா முதலாவது தடுப்பூசி 81,145 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 75,123 பேருக்கும், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி 5,845 பேருக்கும், பாடசாலை மாணவர்களுக்கு 5,667 பேருக்கும், குறிப்பிட்ட இடைவிலகல் பாடசாலை மாணவர்களுக்கு 1233 பேருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House