
posted 10th December 2021
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் ஆகியன இணைந்து மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை வலியுறுத்தியும் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்ந்தும் மன்னார் நகரில் கவனயீர்ப்பு போரட்டம் இன்று காலை 10 மணி தொடக்கம் ஒரு மணி நேரம் வரை நடாத்தப்பட்டது.
இவ் நிகழ்வானது மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவேல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.
இதில் மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளார். தாழ்வுபாடு பங்குத் தந்தை அருட்பணி சூ. ஜயபாலன் குரூஸ் அடிகளார், தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மெசிடோ நிறுவன மன்னார் இணைப்பாளர் யட்சன் பிகிராடோ உட்பட மன்னார் நகர சபை தலைவர் மற்றும் உறுப்பனர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மன்னார் பிரதிநிதி ஆகியோருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House