மன்னாரில்  நாடகப் பயிற்சிப் பட்டறை

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும், வழிப்படுத்தலிலும் மன்னார் மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்த மன்னார் மாவட்ட கலைஞர்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை (11.12.2021) மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வ. மகேஸ்வரன், மன்னார் மாவட்ட செயலக கணக்காளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்து வைத்தனர்.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மடு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி தவமதி ஆகியோர் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகியற்கற்கைகள் பீடத்தின் விரிவுரையாளர் தி. தர்மலிங்கம் மற்றும் யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மா. அருள்சந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களின் வழிப்படுத்தலில் இந்தப்பட்டறை நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில்  நாடகப் பயிற்சிப் பட்டறை

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House