
posted 17th December 2021
பேசாலையில் டெங்கு அபாயத்தை தொடர்ந்து இதிலிருந்து மக்களை காப்பாற்றிக் கொள்ளும் முகமாக இப் பகுதியில் நாள் முழுதும் பாரிய சிரமதானத்தை மேற்கொள்ளும் முகமாக ஊர் மறியல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியில் அன்மையில் சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக மன்னார் பகுதி பெரும் வெள்ளத்தில் மூழ்கிகாணப்பட்டது.
இதில் மக்கள் அதிகமாக செறிந்து வாழும் மன்னார் தீவில் வாழும் மக்கள் மழை வெள்ளத்தின் காரணமாக அதிகமானோர் இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பியிருக்கின்றபோதும் தற்பொழுதும் பல வீடுகளில் வெள்ள நீர் காணப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் நுளம்பு தொல்லைகளும் அதிகரித்து காணப்படுகின்றது.
இந் நுளம்புத் தொல்லையால் மன்னார் பகுதியில் குறிப்பாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனங்கட்டுகொட்டு, சின்னக்கடை, எழுத்தூர், தோட்டவெளி மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் நிலவிவருவதென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதிலும் குறிப்பாக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பேசாலையில் டெங்கு அபாயம் சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதை முன்னிட்டு பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு சபையினரின் ஏற்பாட்டில் புதன்கிழமை (15.12.2021) ஆலய பங்கு மணை மண்டபத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் இக் கிராமத்தின் சகல தரப்பு அமைப்புக்ளும் விஷேட கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சனிக்கிழமை (18.12.2021) பேசாலை பகுதியில் ஊர்மறியல் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றையத் தினம் சகல தரப்பினரும் அதாவது அரச மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து சேவையினர் என அனைத்து பகுதினரும் தங்கள் தொழில்களை முடக்கிவிட்டு டெங்கிலிருந்து இக் கிராமத்தை காப்பாற்றிக் கொள்ளும்முகமாக கிராமம் பூராகவும் அன்றைய நாள் முழுதும் பாரிய சிரமதானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு அதற்காள ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House