
posted 14th December 2021
”இன்னும் இரு வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களில் பஞ்சமும் ஏற்பட்டுவிடும்.” – என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அமைச்சரவையில் உள்ள பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியின் அடிமைகளே! தனி நபர் ஆட்சிக்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதேவேளை, இன்னும் இரு வாரங்களுக்குள் அந்நிய செலாவணி பூச்சிய மட்டத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களுக்குள் பஞ்சமும் ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களைக்கூட விநியோகிக்கமுடியாத நிலைமை அரசுக்கு ஏற்படும். குழப்பகரமான சூழ்நிலை உருவாகும்-என்றார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House