
posted 17th December 2021
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வுடன் நியமனம் பெற்றுள்ள டி.எம்.எல்.பண்டார நாயக்கவிற்கு அம்பாறையில் விசேட பூசை வழிபாடு ஒன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபாராக இதுவரை கடமையாற்றி வந்த பிரதம செயலாளர் பண்டார நாயக்கவின் பங்குபற்றுதலுடன், அம்பாறை ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இந்த விஷேட பூசை வழிபாடு இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வர ஷர்மாவினால் நடத்தப்பட்ட இந்த விசேட பூசை வழிபாட்டில் பிரதம செயலாளருடன், ஆலய பரிபாலன சபையினரான கல்லோயா இந்து பரிபாலன சபை முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக ஆலய பரிபாலன சபைத் தலைவரும், பொறியியலாளருமான வீ.கருணநாதன், உப தலைவரும் பொறியியலாளருமான ஆர்.ராஜ்குமார், ஆலய பரிபாலன சபை முக்கிய உறுப்பினரும், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவருமான எஸ்;.லோகநாதன் ஆகியோர் பூசை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வர ஷர்மா பூசை வழிபாட்டை நடத்தினார். மேற்படி அம்பாறை ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயம், கிழக்கில் கல்லோயத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பழம் பெரும் ஆலயம் என்பதும், மேற்படி கல்லோயாத்திட்டத்தில் வடக்கிலிருந்து வந்து பணியாற்றிய பல உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனான ஒரு முயற்சியே இந்த ஆலயம் உருவாகக் காரணமென்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட அம்பாறை நகரில் அமைந்துள்ள இந்த ஆலய வழிபாடுகளில் சிங்கள மக்களும் கலந்து சிறப்பிப்பது வழக்கமாகும்.

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House