
posted 18th December 2021
கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலைக்கு பழைய மாணவர் ஒருவர், பாடசாலைக்குத் தேவையான சில, உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிந்தவூர்ப் பிரதேச இளைஞர் இணைப்பாளரும், வனவிலங்குகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமல வீரதிஸநாயக்கவின் இணைப்பாளரும், கிழக்கு மாகாண ஆளுநரின் மாகாண கொவிட் தடுப்பு செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஆதம் பாஷித் ஹுஸ்னியே இந்த அன்பளிப்பு உபகரணங்களை வழங்கியவராவார்.
இதன்படி பாடசாலை அதிபர் எம்.அப்துல் கபூரின் கோரிக்கையின் பேரில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பேண்ட் உபகரணங்களும், எல்ஈடி பல்புகளும் பழைய மாணவர் பாஷித் ஹுஸ்னியானல் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
அதிபர் அப்துல் கபூர் தலைமையில் மேற்படி கையளிப்பு நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற போது, பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
பழைய மாணவர் பாஷித் ஹுஸ்னி அதிபர் அப்துல் கபூரிடம் அன்பளிப்புப் பொருட்களை இதன்போது கையளித்ததுடன்,
நிகழ்வில் உரையாற்றிய பலரும் பாஷித் ஹுஸ்னியின் இந்த அன்பளிப்பு தொடர்பில் விதந்து பாராட்டினர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House