
posted 1st December 2021
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பாதீடு) எதிர்ப்பு எதுவுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் நவம்பர் மாத்திற்கான 4 ஆவது சபையின் 44 ஆவது சபை அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டபொழிவை தவிசாளர் தாஹிர் சமர்ப்பித்தார்.
இதன்படி சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருமான மதிப்பீட்டுப் பொழிவாக 172995500 ரூபாவும், செலவாக 17292500 ரூபாவும் பாதீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த உத்தேச வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான உறுப்பினர்களின் கருத்துரைகள் அமர்வில் இடம்பெற்றதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் எதுவுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்திலிக்கும் நிந்தவூர் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கன்ற போதிலும் கட்சி பேதங்களுக்கப்பால் ஏகமனதாக இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை முன்னுதாரணமானதென ப் பலரும் பாராட்டுத்தெரிவித்துள்ளதுடன்,
சிறந்த வரவு செலவுத்திட்டப் பொழிவு இதுவெனவும் உறுப்பினர்கள் பலர் தமது உரையிலும் பாராட்டியுள்ளனர்.
தவிசாளர் தாஹிர் வரவு செலவுத்திட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த சகலகட்சி உறுப்பினர்களுக்கும் சபை அமர்வில் நன்றி தெரிவித்தார்

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House