
posted 1st December 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (30.11.2021) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அத்துடன் தமக்கான நீதியையும் வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
"எங்கே எங்கே உறவுகள் எங்கே?"
"நிதி வேண்டாம்; நீதியே வேண்டும்"
"ஓஎம்பியைத் திணிக்காதே"
"பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே"
"அரசின் பொறுப்பற்ற பதில்களைக் கண்டிக்கின்றோம்"
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House