
posted 19th December 2021
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் சௌபாக்கியா வார நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்று வருகின்றன.
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா வார நிகழ்வாக சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் இடம்பெற்றுவருகின்றன.
இந்த வகையில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லதீபின் ஆலோசனைக்கு அமைவாக சௌபாக்கியா வார நிகழ்வுகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.
குறித்த அரசின் தேசிய கொள்கைத் திட்டமான சௌபாக்கியா வார சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தினை நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு பிரதேச செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய நிந்தவூர் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில், கரையோரம் பேணல் குறித்த சிரமதான துப்பரவு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல்லதீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் சிரமதானப் பணியையும் ஆரம்பித்து வைத்தார்.
நிந்தவூரின் 9 சமுர்த்தி பிரிவுகளில் இடம்பெற்ற இந்த கரையோர சுத்தம் பேணல் சிரமதானத்தில் சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பங்குகொண்டனர்.
நிந்தவூர் சமுர்த்திப் பிரிவினரின் சிறந்த செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை என பிரதேச செயலாளர் சிரமதான நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் கூறினார்.
கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சித்திமாஹிறா உட்பட பல உயரதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House