
posted 18th December 2021
சின்னமலை கடற்கரையில் ஒதுங்கிய மனித எச்சங்கள்vவடமராட்சி - தொண்மைானாறு - கெருடாவில் மேற்கு - சின்னமலை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மனித எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை (15.12.2021) மாலை அந்தப் பகுதியில் எலும்புகள் சில கரையொதுங்கிய நிலையில் காணப்படுகின்றன என்று வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இந்த எலும்புகள் தொடர்பில் இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி பரிசோதனைகளை நடத்தி தகவல்களை வெளியிடுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதியில் அண்மைக்காலமாக மனித சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. இதுவரை நெடுந்தீவில் ஒரு சடலமும் வடமராட்சி பகுதியில் 6 சடலங்களும் கரையொதுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House