
posted 14th December 2021
ஆண்கள் 14 பேர் உட்பட மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 27 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (12) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,641 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House