
posted 22nd December 2021
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள, கிணத்தில் குளிக்கச் சென்ற நிலையில் கிணற்று நீரினுள் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் கிராம மக்களின் முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு இன்று இரவு (22.12.2021) 11.30 மணியளவில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவரது சடலத்தை சுகாதார நடைமுறைகளை பேணி எரியூட்டுவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House