
posted 1st December 2021
காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூராக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஆளுநர் அறிக்கை ஒன்றை விடுத்திருப்பது எமது மக்களுக்கு மிக வேதனை அளிப்பதாகவும், காணி சுபீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுபீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது;
வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச படைகள் பிடிக்கும் நிகழ்ச்சி அண்மைய நாட்கள் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, மண்டைதீவு காரைநகர், மாதகல், வடமராட்சி வடக்கு, வவுனியா வடக்கு என தீவிரமாக முன்னகர்த்தப்படுகிறது.
இதன் செயல்பாட்டுக்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதம் தரித்த படைகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.
காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூராக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஆளுநர் 01.12.2021 வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது எமது மக்களுக்கு மிக வேதனையான விடையம் காரணம் காணி சுபீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுபீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அழைக்கும் போது அதில் கலந்து கொண்டு அதற்காக நியாயம் கேட்பது மக்கள் பிரதி நிதிகளின் கடமை. அவர்கள் அதனை செய்யும் போது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறுவது சால பொருந்தாத ஒன்றாகும்
ஆகவே ஆளுநர் பொது மக்களின் காணிகளை அரச படைகளுக்கு முகாம் அமைப்பதற்கு ஒரு முகவராக செயல்பட வேண்டாம் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House