
posted 27th December 2021

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தகரும், சமூக சேவையாளருமான எம்.ஜ.எம்.றஜப்தீன், திங்கட்கிழமை (27.12.2021) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.ராஜரட்ணம், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜீ.எம்.நதீர், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House