கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள்

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளையும், 6 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகளையும் வழங்கினார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரின் அழைப்பை ஏற்று, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு உதவித் திட்டங்களை பயனாளர்களுக்கு வழங்கினார்.

கொரோனா பரவல் உட்பட பல்வேறு காரணங்களினால் வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், சீனாவினால் முதல் கட்டமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House