உழவு இயந்திரத்தில் இருந்து வீழ்ந்தவர் மரணம்

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சரசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 58 வயதான சுந்தரராஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின்போது படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உழவு இயந்திரத்தில் இருந்து வீழ்ந்தவர் மரணம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House