
posted 8th December 2021

தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம்
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.
இந்திய வம்சாவழியினரான இவர், நேற்று தனது 85ஆவது வயதில் காலமானார்.
சர்வதே உறவுகளுக்கான பிரதி அமைச்சராக இருந்த இவர் சர்வதேச ரீதியாக தமிழர் பிரச்னை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுகளிலும் பங்கேற்றிருந்தவர். 1990களில் இலங்கை வந்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
1998ஆம் ஆண்டு தென்னாபிரிக்க பாராளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உறுப்பினரான இப்ராஹிம் நிறவெறி அரசாங்கத்துக்கு எதிராக போராடியவராவார். இதற்காக அவர் ராபன் தீவு சிறையில் 15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தார். 1994இல் நிறவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் அறியத்தக்கவை.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House