இளைஞன் ஒருவரை கும்பல் துரத்தி வாளால் வெட்டியது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திப் பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளது.
சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் அந்த பகுதியில் நேற்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

யாழ். நகர்ப் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வரா சந்தியில் வழிமறித்து வாள்வெட்டை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடியபோதும் அவர் துரத்தி துரத்தி வாளால் வெட்டப்பட்டார்.

வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்.பல்கலைகழகத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில் பெரும் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞன் ஒருவரை கும்பல் துரத்தி வாளால் வெட்டியது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House