
posted 15th December 2021

மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி செந்துபத்ராஜா
கடந்த மழை வெள்ளத்துக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சிறுவர் தொடக்கம் பெரியோர் வரை டெங்கு நோயாளர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வருவோர் தொகை அதிகரித்து வருவதாகவும் ஒவ்வொருவரும் நுளம்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும் என மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி செந்துபத்ராஜா தெரிவித்தார்.
அண்மையில் மன்னார் மாவட்டத்தில் பெய்த கன மழையால் மன்னார் மாவட்டம் பெரும் வெள்ளக் காடாக காட்சி அளித்திருந்தது. குறிப்பாக மன்னார் தீவில் இவ் வெள்ளநீர் பல இடங்களில் இன்னும் வற்றாத நிலையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக நுளம்நுளம்பின் தொல்லை அதிகரித்ததனால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
இதன் நிமித்தம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விஷேட கருத்தமர்வில் ஒரு வாரம் மன்னாரில் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே.
அத்துடன் இனம் காணப்பட்ட இடங்களில் சுகாதார திணைக்களம், முப்படைகள், கிராம பொது மக்கள், கழகங்கள் என பலரும் ஒன்றினைந்து வீடு வீடாகவும், பொது இடங்களிலும் சிரமதான பணிகளில் ஈடுபட்டு நுளம்பு பெருகா வண்ணம் தக்க நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார திணைக்களமும் முக்கிய இடங்களில் நுளம்பை அழிக்கும் நோக்குடன் புகையீட்டலையும் மேற்கொண்டு வருகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி செந்துபத்ராஜா தெரிவிக்கையில், கடந்த நவம்பர் மாதத்தைவிட டிசம்பர் மாதம் டெங்கு நோயாளர்கள் இவ் வைத்தியசாலைக்கு வரும் தொகை சடுதியாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, ஒவ்வொருவரும் தங்கள் இருப்பிடங்களையும், சுற்றாடல்களையும் நுளம்பு பெருகாவண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House