அமரர் நாகேந்திரம் போஜனின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை முதலுதவிச் சங்கம் -இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமான அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 17/12/2021 வெள்ளிக்கிழமை பிற்பகல் கிளி/விசுவமடு பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை முதலுதவிச் சங்கம்-இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் மகளிர் அணிப் பொறுப்பாளர் திருமதி ச.கேதீஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் தேசிய ஆணையாளர் சிவத்திரு மோகனதாஸ், அமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.அத்துடன் நிகழ்வின் ஓர் அங்கமாக முதல் உதவிச் சங்கத்தில் பணியாற்றி தற்போது இலங்கை காவல்துறையில் இணைந்துள்ள ஜே.ஜெயரோசனின் நிதிப் பங்களிப்பில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் நாகேந்திரம் போஜனின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House