அடுத்தடுத்து கரை ஒதுங்கும் இனந்தெரியாத சடலங்கள்

வடபகுதி கடற்பரப்பில் அடுத்தடுத்து ஒதுங்கும் இனந்தெரியாத சடலங்களினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(27) வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பகுதியிலும் அன்றைய தினம் வல்வெட்டித்துறை பகுதியிலும் இரண்டு சடலங்கள் கரையெதுங்கின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(28) நெடுந்தீவு பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.

அதனைத் தொடர்ந்து வெற்றிலைக்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) சடலம் ஒன்று கரை யொதுங்கியது. இதனை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (02) பிற்பகல் சுப்பர்மடம் கடற்கரையில் இனம்தெரியாத சடலமொன்று கரையொதுங்கியது.

ஆறு நாட்களுக்குள் வடபகுதி கடற்பரப்பில் இனம் தெரியாத ஐந்து சடலங்கள் கரையொதுங்கி இருப்பது பொது மக்களிடத்தில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து கரை ஒதுங்கும் இனந்தெரியாத சடலங்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House