
posted 7th December 2021
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டது - வவுனியா வடக்கு பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கடந்த மாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அது மீளவும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்துக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த வரவு-செலவுத்திட்டத்தை தோற்கடிக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.சஞ்சுதன், கருத்து தெரிவித்தார். அவரது கருத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் முகுந்தன் வழிமொழிந்தார்.
அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு-செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அந்தவகையில் பட்ஜெட்டுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, சுயேச்சைக் குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர். இதனால் 9 வாக்குகளால் 2021 ஆம் ஆண்டுக்கான சபையின் பட்ஜெட் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் உள்ளூராட்சி சட்டங்களின்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House