1757 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம் - முல்லைத்தீவு
1757 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம் - முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் வியாழக்கிழமை (30.12.2021) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .

கோவிட் - 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 1757 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்;

எங்கே எங்கே உறவுகள் எங்கே

குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து

வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்

சர்வதேசமே பதில் சொல்

மரண சான்றிதழும் வேண்டாம்; நட்டஈடும் வேண்டாம்

என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1757 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம் - முல்லைத்தீவு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House