
posted 15th December 2021
கிளிநொச்சி- கோரக்கன்கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில், குழி ஒன்றை வெட்டியபோது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளை மீட்டனர்.
இதேவேளை, குறித்த குழியினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House