
posted 3rd December 2021
கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) இடம் பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று அயலவரை அழைத்துள்ளார்.
இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற அயலவர்கள் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையிலேயே கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House