மீன்பிடித் தொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்று சனிக்கிமை யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம் மற்றும் வட மாகாண கடற் தொழிலாளர்கள் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை நேற்று யாழ். நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் நேற்று யாழ்.நகர பகுதியில் அது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் தொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House