
posted 9th December 2021
மன்னார் மாவட்டத்தில் புதன்கிழமை (8.12.2021) 8 பேருக்கு மேலும் கொரோனா கொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் இம் மாதம் (டிசம்பர்) தொற்றாளர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னாரில் கடந்த 8 ந் திகதி புதன்கிழமை (8.12.2021) 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முருங்கன் வைத்தியசாலையிலும் மற்றும் மன்னார் சுகாதார சேவை அதிகாரி பிரிவிலும் தலா 2 பேருக்கும், மன்னார் பொது வைத்தியசாலை, தலைமன்னார், அடம்பன் வைத்தியசாலைகளிலும் மற்றும் மாந்தை மேற்கு சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருமே கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் கொரோனா 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3059 ஆக அதிகரித்துள்ளது எனவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House