
posted 4th December 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் சிவபுரம் கிராமத்துக்கான பம்பேஸ் நீர்ப்பாசனத் திட்டம் சனிக்கிழமை (04.12.2021) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 50 மில்லியன் ரூபா செலவில் பம்பேஸ் நீர்ப்பாசனம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மோட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இரண்டு போக பயிர்ச்செய்கையை அங்கு மேற்கொள்ள முடியும்.
145 குடும்பங்கள் இந்த நிர்ப்பாசனத்தில் இருந்து பயன்பெறவுள்ளன.
இதனை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.பிறேமகுமார், வடக்கு மாகாண பிரதம செயளாலர் சமன் பந்துலசேன, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House