நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற கரோல் கீத கலை

நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்

நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் நடைபெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் கலந்து கொண்டார்.

கலை நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்கள் மிகவும் இனிமையாக கரோல் கீதம் இசைத்தனர்.

நத்தார் கரோல் கீதம் இசைத்த கால்டன் முன்பள்ளி மாணவர்களுடன் பிரதமர் அவர்கள் நத்தார் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டார்.

கால்டன் முன்பள்ளியின் அதிபரும், பணிப்பாளருமான பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் கலை நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தன கருணாரத்ன, முன்னாள் மேயர் மஹிந்த தொடம்பேகமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற கரோல் கீத கலை

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House